தமிழ்த்தேமா
வெள்ளி, 24 நவம்பர், 2023
முதிர்கன்னி
நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல்
போர்த்தியவனே ...
இமைகள் தழுவும்
இருளின் வேளையில்
இதயம் தேடிய கள்வனே
வா ...
இரவின் நீல அகலங்களில்
நெட்டி முறி
இருளின் நீளம்
எதுவென்று கண்டுபிடி
மின்விசிறி சுழலிலும்
வேர்க்கும் வரம் கொடு ...
விரல் ஊன்றி
உடல்நட
மெல்லத் தழுவு
மூச்சின் வெப்பம் அறி
தொடர்ந்து வா
இதழ்களால் தேகம் வரை
எங்கும் தீண்டு
எச்சரிக்கையாய்
பல் கடி
நாக்கின் நுனியால்
மூக்கினைத் தொடு
காதோர வளைவை
நாவால் வருடு
எவ்வளவோ ......
அவ்வளவை மீறு ...
இடம் வலம் தேடு
நழுவிய ஆடை நகர்த்து
வெயில் படாத இடங்களில்
விரல் தீண்டு
இன்னும் ....
இன்னுமாய் ...
தொடரும் மீறலில் ....
ஏண்டி... சனியனே ...
இன்னுமா தூங்குற
அம்மாவின் குரல்
அன்னிச்சையாய்
கலைந்த கனவு...
காதலித்துப்பார்....
நிலவு சுடும் ...
சுடாத சூரியன் வரும்.. நெருப்புக்குள்ளும் குடியிருக்க நினைப்பு வரும்..
தண்ணீரெல்லாம் வெந்நீராய் தகிக்கும்
தனிமை சுகமாகும்
நீ என்பது
நாம் ஆகும்
நிழல் கூட சற்று
தள்ளி விழும்
எதிர்ப்படுபவர் எவராயினும்
வறண்ட உதடுகள்
புன்னகை பூக்கும்
காற்றோடு பேசத் தோன்றும் கவிதையும் பேனாவும்
கைக்குள் வசப்படும்
நீ யாரென்று
எவராவது கேட்டால்
நீளமான புன்னகை
நிச்சயமாய் வரும் ...
வகுப்பறை சத்தங்கள் கூட
சங்கீதம் ஆகும்
காத்திருக்கும் வேளையில் கூட
ஐ மிஸ் யூ என்று
ஸ்டேட்டஸ் போட சொல்லும் சாலையோர பூக்களின்
வாசனை பிடிக்கும்
ஐந்து கிராம் இதயம் கூட
50 கிலோவை தாங்கும் ....
ஆணாகவோ....
பெண்ணாகவோ.... வேண்டாம்
மனிதன் ஆக வேண்டுமா காதலித்துப்பார்
மரணம் வரும் வேளை கூட
சற்று தள்ளிப் போகும்
காதலித்துப்பார்....
வா காதல் செய்வோம்
புள்ளியிலிருந்து
வரையப்பட்ட கோடு போல
தொடங்குகிறேன்
புள்ளி - காதல்
நேற்று வரை
ஒதுக்கிவைக்கப்பட்டவொன்று
ஒத்திகை
பார்க்கிறது
இருபதிலும்
அறுபதிலும்
காதல் முதலில்
வெட்கம்
தருகிறது
உனைப் பார்த்தேன்
உறங்கிக் கிடந்த
உணர்வுகளெல்லாம்
முத்தமிட்டுக் கொண்டன
இமைகளைப்
போல……
உடைந்த கண்ணாடியின்
ஓவ்வொரு சில்லிலும்
முகம் தெரிவது போல
பார்க்கிறவா்களெல்லாம்
நீயாகத் தான் தெரிகிறாய்…
சரியென்று சொல்
பெண்ணே
இத்தனை காலமாய்
இறுக்கி வைத்த காதல்
புது வௌ்ளம் போல்
கரைபுரண்டு ஓடும்
நீந்தலாம்
நீ…
சம்மதம் சொல்
உயிர் உருக உருக
காதலிக்க
உனக்காக
காத்திருக்கிறேன்….
நேற்று வரை
முகத்தின் இரண்டு கண்கள்
இன்று முதல்
ஒரு கண்ணின் இமைகளாய்
முத்தமிட்டுக்
கொள்வோம்….
வா…
காதலிக்கலாம்….
வாழ்க்கையை….
செவ்வாய், 19 அக்டோபர், 2021
யாரிடமும் சொல்லாதே
முதிர்கன்னி
நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...
-
ஒரு இலக்கியப் பயணத்திற்கான மகிழ்வில் கற்பனையைத் தொலைத்துவிட்டு தொடங்கியது என் பயணம் சாரதியில்லாத தேரைப்போல……….. அகம் புறம் ஆன்மீகம் ...
-
காதல்…. காதல்…. முதுமையை இளமையாக்கும் மூல மந்திரச்சொல்…. நினைத்தாலே நகை தோன்றும் உச்சரித்தால் கனி இதழில் தேன் சொட்டும் காத...
-
யாரிடமும் சொல்லாதே ரகசியமெலாம் ஒன்றில்லை நான் மரணித்துவிட்டேன்… உண்மையாகவா…! நிஜமாகவே…! எனக்குத் தெரியாமல் எப்படி? எனக்கே தெரியவில்லை? என்னா...
-
மௌனமாக இருக்கிறேன் கோபமாக இருப்பதாக கூறுகிறார்கள் இப்பொழுதும் மௌனமாக இருக்கிறேன். எண்களைக் கற்றுத் தருகிறேன் ஒன்று என்று ஆரம்பித்த உடனே இரண...
-
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் நிலவை ரசிப்பதில்லை தொலைக்காட்சி சோட்டா பீம்மையும் மைட்டி ராஜீவையும் தவிர அக்கா தன் தோழிகளோடு அம்மா அலுவலக...