வெள்ளி, 24 நவம்பர், 2023

முதிர்கன்னி


நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல்
போர்த்தியவனே ...

இமைகள் தழுவும்
இருளின் வேளையில்
இதயம் தேடிய கள்வனே
வா ...

இரவின் நீல அகலங்களில்
நெட்டி முறி

இருளின் நீளம்
எதுவென்று கண்டுபிடி

மின்விசிறி சுழலிலும்
வேர்க்கும் வரம் கொடு ...

விரல் ஊன்றி
உடல்நட

மெல்லத் தழுவு
மூச்சின் வெப்பம் அறி

தொடர்ந்து வா

இதழ்களால் தேகம் வரை
எங்கும் தீண்டு

எச்சரிக்கையாய்
பல் கடி

நாக்கின் நுனியால்
மூக்கினைத் தொடு

காதோர வளைவை
நாவால் வருடு

எவ்வளவோ ......
அவ்வளவை மீறு ...

இடம் வலம் தேடு
நழுவிய ஆடை நகர்த்து
வெயில் படாத இடங்களில்
விரல் தீண்டு

இன்னும் ....
இன்னுமாய் ...
தொடரும் மீறலில் ....

ஏண்டி... சனியனே ...
இன்னுமா தூங்குற

அம்மாவின் குரல்

அன்னிச்சையாய்
கலைந்த கனவு...

காதலித்துப்பார்....

காதலித்துப்பார்
நிலவு சுடும் ...
சுடாத சூரியன் வரும்.. நெருப்புக்குள்ளும் குடியிருக்க நினைப்பு வரும்..
தண்ணீரெல்லாம் வெந்நீராய் தகிக்கும்
தனிமை சுகமாகும்
நீ என்பது
நாம் ஆகும்
நிழல் கூட சற்று
தள்ளி விழும்
எதிர்ப்படுபவர் எவராயினும்
வறண்ட உதடுகள்
புன்னகை பூக்கும்
காற்றோடு பேசத் தோன்றும் கவிதையும் பேனாவும்
கைக்குள் வசப்படும்
நீ யாரென்று
எவராவது கேட்டால்
நீளமான புன்னகை
நிச்சயமாய் வரும் ...
வகுப்பறை சத்தங்கள் கூட
சங்கீதம் ஆகும்
காத்திருக்கும் வேளையில் கூட
ஐ மிஸ் யூ என்று
ஸ்டேட்டஸ் போட சொல்லும் சாலையோர பூக்களின்
வாசனை பிடிக்கும்
ஐந்து கிராம் இதயம் கூட
50 கிலோவை தாங்கும் ....
ஆணாகவோ....
பெண்ணாகவோ.... வேண்டாம்
மனிதன் ஆக வேண்டுமா காதலித்துப்பார்
மரணம் வரும் வேளை கூட
சற்று தள்ளிப் போகும்
காதலித்துப்பார்....

வா காதல் செய்வோம்

 


புள்ளியிலிருந்து

வரையப்பட்ட கோடு போல

தொடங்குகிறேன்

புள்ளி - காதல்

 

நேற்று வரை

ஒதுக்கிவைக்கப்பட்டவொன்று

ஒத்திகை பார்க்கிறது

 

இருபதிலும்

அறுபதிலும்

காதல் முதலில்

வெட்கம்

தருகிறது

 

உனைப் பார்த்தேன்

உறங்கிக் கிடந்த

உணர்வுகளெல்லாம்

முத்தமிட்டுக் கொண்டன

இமைகளைப் போல……

 

உடைந்த கண்ணாடியின்

ஓவ்வொரு சில்லிலும்

முகம் தெரிவது போல

பார்க்கிறவா்களெல்லாம்

நீயாகத் தான் தெரிகிறாய்

 

சரியென்று சொல்

பெண்ணே

இத்தனை காலமாய்

இறுக்கி வைத்த காதல்

புது வௌ்ளம் போல்

கரைபுரண்டு ஓடும்

நீந்தலாம் நீ…

 

சம்மதம் சொல்

உயிர் உருக உருக

காதலிக்க

உனக்காக

காத்திருக்கிறேன்….

 

நேற்று வரை

முகத்தின் இரண்டு கண்கள்

இன்று முதல்

ஒரு கண்ணின் இமைகளாய்

முத்தமிட்டுக் கொள்வோம்….

வா…

காதலிக்கலாம்….

வாழ்க்கையை….

                                                                                                                                               

செவ்வாய், 19 அக்டோபர், 2021

யாரிடமும் சொல்லாதே

யாரிடமும் சொல்லாதே
ரகசியமெலாம் ஒன்றில்லை
நான் மரணித்துவிட்டேன்…

உண்மையாகவா…!

நிஜமாகவே…!

எனக்குத் தெரியாமல் எப்படி?

எனக்கே தெரியவில்லை?

என்னால் நம்பமுடியவில்லை…
என்ன காரணம்?
யாரேனும் விசம் வைத்தார்களா?
ஏதாவது மனக்கசப்பா?
ஏற்றுக்கொள்ளமுடியாத அன்பா?
துக்கமா?
துயரமா?
தோல்வியா?
விபத்தா?
தற்கொலையா?
கொலையா?
இல்லை யாராவது உன்னை
செத்துத் தொலை என்றனரா?
எதற்கும் பயனற்றவன் என்று?
உன்னால் என்ன பிரயோஜனம் என்று?
நிராகரித்தார்களா?
யாரையாவது ஏமாற்றினாயா?
இல்லை
ஏமாற்றப்பட்டாயா?
கண நேரத்தில் எடுத்த முடிவா?
சொல்….

மரணத்திற்கு
இவ்வளவு காரணங்களா!..
ஏதோ உயிர் போதலென்று
நினைத்திருந்தேன்..

இன்னும் சிறுபிள்ளையாகவே
இருக்கின்றாயே..
காரணத்தைச் சொல்…

தெரியவில்லை
இரவில் வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தேன்
எழுந்து பார்த்தபோது
உன் வீட்டிலிருக்கிறேன்.
எனக்கே குழப்பமாக இருக்கிறது.
ஆனாலும் நான்
மரணித்துவிட்டேன்…

அடேய் சித்திரகுப்தா..

அரசே…

தெரியாமல்
நம் உலகத்திற்கு வந்தவனை
ஆதரிப்பதா? நிராகரிப்பதா?
ஆயினும் 
அவன் மரணித்துவிட்டான்.

என்ன செய்ய?

யாரிடமும் சொல்லாதே…

உத்தரவு அரசே!...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கு

நமிதாவின் 
பிறந்த நாள் சுவரொட்டி 
ஒருவேளை உணவானது 
மாட்டுக்கு

முரண்

பள்ளியில் தூங்கியவன்
கல்வித் தந்தையானான்

வீணையோடு சரஸ்வதி
அவன் வீட்டில்

வாய்ப்பு

இப்போதும் காத்திருக்கின்றேன் 
அதே இடத்தில் 
எப்போது வருவாய்..

முதிர்கன்னி

நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...