ஒரு இலக்கியப் பயணத்திற்கான மகிழ்வில்
கற்பனையைத் தொலைத்துவிட்டு
தொடங்கியது என் பயணம்
சாரதியில்லாத தேரைப்போல………..
அகம் புறம்
ஆன்மீகம் அறிவியல்
நீதி வானவியல்
இலக்கணம்-என
விரிந்து கிடந்தது உலகம்
அதில்
கரையில் நின்று கொண்டு
கடலின் எல்லையை
வரையறுத்துக்
கொண்டுருக்கிறேன்.
புறத்தில் புறப்பட்டு
அகத்தில் அகப்பட்டு
கனவு சிறகு விரித்து
காதல் குடையுடன்
கண்ணாதாசன் கை பிடித்து
வைரமுத்துவோடு
வலம் வரும் போது
வார;த்தைகளின் விசாரிப்பில்
தெரிந்தது
கற்பனையை மறந்தது
தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேட
இருக்கின்ற ஒன்றை விட்டுப்
புறப்பட்டு விட்டேன்
கனவுக் காதலியைத் தேடும் போது
எதிh;ப்படுபவள் எல்லாம்
காதலியாகத்தான் தெரியும்
அங்கே
போh;க்களத்தில்
வாளிழந்த மன்னனாக அல்ல
வாளே கொண்டு செல்லாத
மன்னனாக நிற்கிறேன்
கடலில் மீன் பிடிக்க வலையை
தொலைத்து விட்;டுச் சென்றவன்
கடற்கரையில் தொலைத்த
மூக்குத்தியைத் தேடி
புறப்பட்டு விட்டேன்
கண்டு பிடித்தே தீருவேன்-வீரம்
கடற்கரை மணலில் காண முடியுமா - விவேகம்
இவை
இரண்டையும் முந்திச் செல்கிறது
என் தன்னம்பிக்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக