ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

பயணம்


ஒரு இலக்கியப் பயணத்திற்கான மகிழ்வில்
கற்பனையைத் தொலைத்துவிட்டு
தொடங்கியது என் பயணம்
சாரதியில்லாத தேரைப்போல………..

அகம் புறம்
ஆன்மீகம் அறிவியல்
நீதி வானவியல்
இலக்கணம்-என
விரிந்து கிடந்தது உலகம்

அதில்
கரையில் நின்று கொண்டு
கடலின் எல்லையை
வரையறுத்துக்
கொண்டுருக்கிறேன்.

புறத்தில் புறப்பட்டு
அகத்தில் அகப்பட்டு

கனவு சிறகு விரித்து
காதல் குடையுடன்
கண்ணாதாசன் கை பிடித்து
வைரமுத்துவோடு
வலம் வரும் போது
வார;த்தைகளின் விசாரிப்பில்
தெரிந்தது
கற்பனையை மறந்தது

தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேட
இருக்கின்ற ஒன்றை விட்டுப்
 புறப்பட்டு விட்டேன்

கனவுக் காதலியைத் தேடும் போது
எதிh;ப்படுபவள் எல்லாம்
காதலியாகத்தான் தெரியும்

அங்கே
போh;க்களத்தில்
வாளிழந்த மன்னனாக அல்ல
வாளே கொண்டு செல்லாத
மன்னனாக நிற்கிறேன்

கடலில் மீன் பிடிக்க வலையை
தொலைத்து விட்;டுச் சென்றவன்

கடற்கரையில் தொலைத்த
மூக்குத்தியைத் தேடி
புறப்பட்டு விட்டேன்

கண்டு பிடித்தே தீருவேன்-வீரம்
கடற்கரை மணலில் காண முடியுமா - விவேகம்

இவை
 இரண்டையும் முந்திச் செல்கிறது
என் தன்னம்பிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முதிர்கன்னி

நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...