காதலித்துப்பார்
நிலவு சுடும் ...
சுடாத சூரியன் வரும்.. நெருப்புக்குள்ளும் குடியிருக்க நினைப்பு வரும்..
தண்ணீரெல்லாம் வெந்நீராய் தகிக்கும்
தனிமை சுகமாகும்
நீ என்பது
நாம் ஆகும்
நிழல் கூட சற்று
தள்ளி விழும்
எதிர்ப்படுபவர் எவராயினும்
வறண்ட உதடுகள்
புன்னகை பூக்கும்
காற்றோடு பேசத் தோன்றும் கவிதையும் பேனாவும்
கைக்குள் வசப்படும்
நீ யாரென்று
எவராவது கேட்டால்
நீளமான புன்னகை
நிச்சயமாய் வரும் ...
வகுப்பறை சத்தங்கள் கூட
சங்கீதம் ஆகும்
காத்திருக்கும் வேளையில் கூட
ஐ மிஸ் யூ என்று
ஸ்டேட்டஸ் போட சொல்லும் சாலையோர பூக்களின்
வாசனை பிடிக்கும்
ஐந்து கிராம் இதயம் கூட
50 கிலோவை தாங்கும் ....
ஆணாகவோ....
பெண்ணாகவோ.... வேண்டாம்
மனிதன் ஆக வேண்டுமா காதலித்துப்பார்
மரணம் வரும் வேளை கூட
சற்று தள்ளிப் போகும்
காதலித்துப்பார்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முதிர்கன்னி
நிலவின் மௌனத்தில் நின்று இருளின் நிழல் போர்த்தியவனே ... இமைகள் தழுவும் இருளின் வேளையில் இதயம் தேடிய கள்வனே வா ... இரவின் ...
-
ஒரு இலக்கியப் பயணத்திற்கான மகிழ்வில் கற்பனையைத் தொலைத்துவிட்டு தொடங்கியது என் பயணம் சாரதியில்லாத தேரைப்போல……….. அகம் புறம் ஆன்மீகம் ...
-
காதல்…. காதல்…. முதுமையை இளமையாக்கும் மூல மந்திரச்சொல்…. நினைத்தாலே நகை தோன்றும் உச்சரித்தால் கனி இதழில் தேன் சொட்டும் காத...
-
யாரிடமும் சொல்லாதே ரகசியமெலாம் ஒன்றில்லை நான் மரணித்துவிட்டேன்… உண்மையாகவா…! நிஜமாகவே…! எனக்குத் தெரியாமல் எப்படி? எனக்கே தெரியவில்லை? என்னா...
-
மௌனமாக இருக்கிறேன் கோபமாக இருப்பதாக கூறுகிறார்கள் இப்பொழுதும் மௌனமாக இருக்கிறேன். எண்களைக் கற்றுத் தருகிறேன் ஒன்று என்று ஆரம்பித்த உடனே இரண...
-
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் நிலவை ரசிப்பதில்லை தொலைக்காட்சி சோட்டா பீம்மையும் மைட்டி ராஜீவையும் தவிர அக்கா தன் தோழிகளோடு அம்மா அலுவலக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக